Friday, December 8, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 3

இவ்வளவு வெறியாட்டத்திற்க்கும் முதற்க்காரணம், கொலம்பஸின் போராசை தான். அடிப்படையில் அவன் ஒரு மாலுமி மற்றும் பிசினஸ் மேன்.

ஐரோப்பிய தொழில் செழிக்க முக்கியமானது, அது ஆசிய நாடுகளுடன் செய்துவந்த வர்த்தகம், அதிலும் செல்வம் கொழித்த, முன்னேறிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா. விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலைகளில் செழிப்பான இந்தியா மற்றும் சீனாவுடன் செய்து கொண்டிருந்த வர்த்தகத்தால் தான், வருடத்தில் பாதி நாட்கள் பனியில் மூடிக்கிடக்கும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த வர்த்தகத்திற்க்கு உதவியாக இருந்தது அப்போதய பல நாடுகளை இணைத்த சர்வதேச சாலையான 'சில்க் ரூட்'. சில்க் ரூட்டை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இணையத்தில் தேடிப்பாருங்கள். வரலாற்று பிரியர்களுக்கு பல சுவாரசியமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றது.

அந்நாட்களில் முக்கியமாக மேற்காசிய நாடுகளில், மதம்சார்ந்த போர்கள் நடந்துக்கொண்டிருந்தது. குறிப்பாக கிருத்துவ இஸ்லாமிய நாடுகளுக்குள் அடிக்கடி போர் மூழும். இதில் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இடம், Constantinople எனும் நகரம். இன்றைய துருக்கியின் தலைநகரான இஸ்தான்பூல் தான் இந்த Constantinople நகரம். அது 1453-ல் சக்தி வாய்ந்த இஸ்லாமிய ஓட்டமன் போரரசர்களின் கைவசம் வந்தது.

அவர்கள், சில்க் ரூட்டை கிருத்துவ நாட்டவருக்கு மூடிவிட்டார்கள், மாற்றுப்பாதை மத்தியதரைகடல் வழியாக எகிப்து, தொடர்ந்து தரைவழியாக செங்கடல், அப்புறம் செங்கடல் வழியாக அரபிக்கடல் மூலம் இந்தியா. அதற்க்கும் சாத்தியமில்லை, காரணம் அந்த பகுதிகளும் ஒட்டமன் பேரரசின் கீழே. மத்திய தரைகடலையும், செங்கடலையும் இனைக்கும் சூயஸ் கால்வாய் எல்லாம் அக்கலத்தில் இல்லை.

இதனால் ஓட்டமன் அரசுக்கு மேற்கே இருந்த ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரம் திண்டாட ஆரம்பித்தது.

அவர்களுக்கு தங்கத்திற்க்கு ஈடான மிளகு, மஞ்சள், பட்டை இலவங்கம் போன்ற spices வியாபாரம் மொத்தமாக படுத்துக்கொண்டது.

இதனால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்க்கு கடல் வழி என்பது உடனடி தேவையானது. இதுதான் age of discovery என்னும் ஒரு சகாப்தத்தை வரலாற்றில் உருவாக்கிவைத்தது.

உலகப்போர்கள் உலகின் தொழில் வளர்ச்சிக்கு உதவியதைப்போல, ஒருவகையில் age of discovery உருவாக மறைமுகக்காரணமாக இருந்த ஓட்டமன் மன்னர்களுக்கு உலகம் நிச்சயமாக கடமைப்பட்டிருக்கிறது.

இன்னிலையில் கொலம்பஸ் போர்சுகீசிய மன்னரை அணுகி தன்னுடைய 'மேற்கு புறமாக இந்திய கடல் வழி பாதை'(Enterprise of the Indies) திட்டத்தை முன் வைத்தான். அதை அவர் பொருட்டாக மதிக்கவில்லை. பின்னர் ஸ்பானிஸ் அரசை அணுகி, திட்டத்தை விவரித்தான். ஆனால், அங்கும் திட்டம் நிராகரிக்கப்பட்டது. காரணம், அதற்கு முன் உலகம் தட்டையானது என்றும், கடலில் போக போக பூமியின் விளிம்பை எட்டியதும், கீழே விழுந்துவிட்டுவோம் எனவும் நம்பிக்கொண்டிருந்தார்கள். பூமி தான் பிரபஞ்சத்தின் மையம் என்றும் அதை சுற்றித்தான் சூரியன் முதல் எல்லாக் கோள்களும் உள்ளது என நம்பிக்கொண்டிருந்தவர்கள், பூமி உருண்டை என சொன்ன குற்றத்திற்க்காக Bruno -வை உயிருடன் எரித்துக்கொன்று விட்டார்கள். அதன் பின் கலிலியோ வந்து நிரூப்பித்த பின்னும், அவரையும் குற்றாவாளியாகத்தான் பார்த்தார்கள்.

கொலம்பஸின் காலம், அதற்குப்பின் சில நூற்றாண்டுகள் ஆனதால், பூமி ஏறக்குறைய உருண்டை தானோ என ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த கால கட்டத்தின் தொடக்கம், ஆனால் யாரும் போய் பார்த்ததில்லை.

அட்லாண்டிக்கடலில் பயணித்தால், அது இந்தியாவின் கிழக்கு கடற்கரையை அடையும் என் கொலம்பஸ் நம்பினான். ஆனால் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது.

[பூமி தட்டையானது தான், இந்த உலக மக்களை ஒரு சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று பல கோஷ்டி இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்பவில்லையென்னால், https://wiki.tfes.org/The_Flat_Earth_Wiki பக்கத்தை போய் பாருங்கள். அவர்கள் பகல் இரவு, பருவ காலங்கள் இப்படியான விசயங்கள் தட்டையான பூமியில் எப்படி ஏற்படுகின்றது என விளக்கமாக கூறுகிறார்கள்.]

எது எப்படியோ, ஆசியாவிற்க்கு மேற்கு வழியாக கடல் வழி கண்டு பிடிப்பதற்கான திட்டம் இரண்டு முறை நிராகரிப்புக்குப்பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொலம்பஸை ஸ்பானிஸ் அரசி இசபெல்லா நம்பினாள். ஒரே பிரச்சனை இந்த பயணத்திற்கு ஆகப்போகும் மிகப்பெரிய பொருட்செலவு.

ஸ்பானிய King Ferdinand and Queen Isabella, அந்நாட்டு யூதர்கள் மற்றும் இஸ்லாமியரை கிருத்துவராக மாற கட்டளையிட்டனர். பெயருக்கு மாறியதாக கூறிக்கொண்டு, வீட்டிற்க்குள் தன் சொந்த மதத்தை பின்பற்றியவரை எரித்துக் கொன்றார்கள். அவர்களுடைய சொத்துக்களை நாட்டுடமை ஆக்க புதிய சட்டம் கொண்டு வந்து அவற்றை அபகரித்து விற்று பணம் தேற்றினர். ஒரு வேளை பயணம் தோல்வியடைந்தாலும் கஜானாவிற்கு எந்த வித பாதிப்பும் இல்லை. வெற்றி பெற்றால் நாட்டிற்க்கு தொழில் வளம் மற்றும் வரலாற்றில் ஓர் இடம்.

ஒரு வழியாக ஆகஸ்ட் 3, 1492-ல் மூன்று சிறிய கப்பலில் (சாண்டா மரியா, பிண்டோ மற்றும் நினா அவற்றின் பெயர்) பயணத்தை தொடங்கினார்கள். உற்சாகமாக கிளம்பிய பயணம் 50 நாட்களுக்கு மேலாகியும் முடியாததால், பயணக்குழு சோர்வடைந்தது, பாதி பேர் திருப்பி போகலாம் என வழியுறுத்த ஆரம்பித்தார்கள். இதனை சமாளிக்க கொலம்பஸ் இரண்டு உத்திகளை கையாண்டான்.

எத்தனை நாட்கள் பயணம் செய்தோம் என்ற கணக்கை குழுவிற்கு குறைத்து மாற்றி அறிவித்துக்கொண்டிருந்தான்.

இன்னொன்று, முதலில் நிலப்பரப்பை பார்த்து சொல்பவர்களுக்கு, 10000 மார்வாடிகள்(அக்காலத்தில் கடலில் பணிபுரிபவரின் ஒரு வருடத்தைய ஊதியம்) என அறிவித்தான்.

கடைசியில் முதலில் நிலபரப்பை பார்த்தவனுக்கு அந்த பரிசை அளிக்காமல், தான் முதல் நாள் இரவே சிறிய ஒளியை அந்த நிலபரப்பில் பார்த்து விட்டேன் எனக் கூறி தானே வைத்துக்கொண்டது தனிக்கதை.

ஒருவழியாக இரு மாதத்திற்க்கும் மேலான அப்பயணம், அக்டோபர் 12, 1942 வெள்ளிக்கிழமை புதிய உலகை கண்டதும் முடிந்தது. கொலம்பஸ் காலடி வைப்பதற்கு 500 வருடம் முன்பே வட அமெரிக்கா கண்டத்தின் ஒரு பகுதியில் (இன்றைய கனடா நாடு) காலடி வைத்து ஒரு காலனியை உருவாக்கியவர் ஐஸ்லாந்தை சேர்ந்த எரிக்சன்(Leif Erikson). அவர் தான் முதலில் அமெரிக்காவை கண்டுபிடித்தவர், அவர் கொலம்பஸைப்போல வரலாற்றில் இடம் பிடிக்காததற்க்கு பல காரணங்கள். அதை விவரித்தால், நம்முடைய செவ்விந்தியர் கதையிலிருந்து விலகி விடும் என்பதால், வாசகளின் கூகுள் ஆராய்ச்சிக்கே விட்டு விடுகிறேன்.


கொலம்பஸின் குறிப்பில் அவன் குறிப்பிட்டுள்ளது படி, அவன் ஆசியாவில் வந்து இறங்கிவிட்டதாகவும், அப்பகுதி ஜப்பான் அல்லது சீனாவிற்குட்ட பகுதியாக இருக்கலாம் எனவும், உள்ளே சென்றால் இந்தியாவை அடைந்து விடலாம் எனவும் இருக்கிறது.

விடியற்காலை கடற்கரையை அடைந்ததும், தங்கள் கொடியையும் சிலுவையையும் நட்டு வைத்து, அந்த பகுதியை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக வானத்தை நோக்கி கூவி அறிவித்தான்.

அப்போது தான் கூட்டம் கூட்டமாக கடற்கரையை நோக்கி அவர்கள் வரக்தொடங்கினார்கள். அவர்கள் ஆடையேதும் அனிந்திருக்கவில்லை. செந்நிறம் கொண்ட அவர்கள் புதிய மக்களை கண்டதும் உற்சாகமாக வரவேற்றார்கள்.

ஐரோப்பியர்கள் பின்னாளில் சென்ற இடங்களில் கூட எந்த இன செவ்விந்தியரும் அவர்களுக்கு எதிர்ப்பு காட்டவில்லை. பொதுவாக வரவேற்றார்கள் அல்லது பயந்து மலைகளில் ஓடிச்சென்று தஞ்சம் புகுந்து கொண்டார்கள். ஒரு சிலர் பெரிய கப்பலை பார்த்து கடவுளின் தேவ தூதர்களாக பார்த்தார்கள்.

இருவருக்குள்ளும் பொது மொழி சைகைகள் தான். அவர்களின் சைகைகளிலிருந்து, கொலம்பஸ் புரிந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளது, "மற்ற இனத்தை சேர்ந்த செவ்விந்தியர் எங்களை அடிமைகளாக பயன் படுத்துகிறார்கள்” என்பது. அது சரியோ தவறோ தெரியாது, ஆனால், "தீவை அடைந்த முதல் நாளே, இவர்கள் நமக்கும் நல்ல அடிமைகளாக இருப்பார்கள் என முடிவு செய்து, ஐந்து செவிந்தியர்களை அடிமையாக்கி படகில் வைத்துக்கொண்டோம்".

தங்களின் முதல் அடிமைகளிடமும், மற்றும் அடுத்து வந்த ஒரு நூற்றாண்டாக கேட்டுக்கொண்டிருந்த ஒரே கேள்வி, அவர்கள் காதில் அணிந்திருந்த "தங்கம் எங்கே?”

கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கை, "தங்கம் தான் சொர்க்கத்திற்கான ஒரே ஓரு நுழைவுசீட்டு, தங்கம் தான் இவ்வுலகில் எல்லாமே, அதை வைத்திருப்பவர் தங்கள் பாவங்களைக்கூட கழுவிவிட்டு, நரகத்திலிருந்து விடுபட்டு சொர்கம் சேரலாம் ” என்பது தான்.

அதனாலேயே தங்கத்தை அடைய எந்த பாவத்தையும் செய்ய தாயராகி மனித வேட்டையில் இறங்கினான்.
தொடரும்....

No comments:

Post a Comment