Tuesday, June 30, 2009

ராஜீவ் காந்தி சேது


Sonia inaugurates Bandra-Worli sea link - NDTV News.
"The country's first ever sea link will reduce the travel time ..."

New India sea link bridge opens - BBC News.
"The first bridge to be built over the sea in India has been officially opened in Mumbai by Sonia Gandhi..."

Bandra-Worli Sea Link named Rajiv Gandhi Setu. - இன்டியன் எக்ஸ்பிரஸ்.
மிகவும் நல்ல செய்தி. எவ்வளவு நாட்கள் இழுத்துக்கொண்டு இருந்தது?, எவ்வளவு செலவு அதிகம் ஆனது? எல்லாவற்றையும் விட்டுத் தள்ளுங்கள். இந்தியா முன்னெறிக்கொண்டு இருப்பதற்க்கு இது இன்னும் ஓர் எடுத்துக்காட்டு.

ஆனால், என் மனதை உறுத்தும் ஒரு கேள்வி... இந்தியாவின் முதல் கடல் பாலம், ... முதல் கடல் பாலம் என்கிறார்களே... ஏன்? அப்படி என்றால் இராமேஸ்வரம் பாலத்தை எந்த கணக்கில் சேர்பது?

இந்த செய்தியை, சுதந்திர இந்தியாவில் கட்டிய முதல் கடல் பாலம் என்று பொருள் கொள்ள வேண்டுமா? அல்லது, சுதந்திர இந்தியாவில் கட்டிய முதல் கடல் தொங்கும் பாலம் என்று பொருள் கொள்ள வேண்டுமா? அல்லது வேறு எந்த காரணமும் உள்ளதா?

இனையத்தில் தேடியும் சரியான பதில் கிடைக்க்வில்லை. இதை படிக்கும் யாருக்கேனும் விடை தெரியுமா?

Tuesday, June 23, 2009

என் பெட்(BED)-ல் நடிகை


முதல் வேலை காரணமாய் உடுமலைபேட்டையில் இருந்த போது, ஒரு லாட்ஜில் தங்கி இருந்தேன். பெயர் ஞாபகம் இல்லை, ஆனால், அந்த ஊரில் அது கொஞ்சம் நல்ல லாட்ஜ்.

நான் கீழ் ப்ஃளோரில் கடைசியில் உள்ள சிங்கிள் ரூமில் இருந்தேன். 2 மாதம் முடிந்தது, இன்னும் 4 மாதம் இருப்பேன்.

ஒரு நாள் காலை மொத்த லாட்ஜும் காலி பண்ணிக் கொண்டு இருத்தார்கள். 8 மணிக்கு ட்ரைனிங் என்பதால், அவசரத்தில் என்ன ஏது என்று விசாரிக்க வில்லை.

மதியம் தூங்குவதற்க்கு லாட்ஜுக்கு வந்தால், வாசலில்ல் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. செக்யூரிடி லத்தி வைத்து சமாளித்துக்கொண்டு இருந்தார்.

"ஹிரோயின் இப்பத்தான் இந்த பக்கம் போச்சு"

"அது சங்கவி"

"அட, ஏதொ புதுசு மாதிரி தெரியுதுப்பா"

கூட்டத்தை தள்ளிக்கொண்டு உள்ளே போனேன். ரொம்ப நாளாக இருப்பதால், செக்யூரிடிக்கு என்னை நன்றாக தெரியும். உள்ளே விட்டார்.

"என்னப்பா இது?" - நான்

"சார்... மொத்த லாட்ஜும் சினிமா யூனிட் தங்கி இருக்காங்க... நீங்க மட்டும்தான் வெளி ஆளு" - செக்யூரிடி

"படம் பேரு?"

"இராவணனாம்... லியாகத் அலி கான் தான் ஹிரோ"

ரிசப்ஷனிலும் ஒரே கூட்டம். வழக்கமாய் வணக்கம் சொல்லும் மேனெஜர், ரொம்ப பிஸியாக இருந்தார். என்னை பார்க்கக்கூடவில்லை.

என் ரூமுக்கு போய் லாக்கை(LOCK) திறந்தேன், திறக்கவில்லை. உட்பக்கம் மூடி இருந்தது.

"ரூம் பாயா?... வழக்கமாய் 10 மணிக்கு வந்து க்ளீன் செய்து விட்டு போய் விடுவானே..." கதவைத் தட்டினேன், திறந்ததும் தூக்கி வாரி போட்டது.

என் பெட்(BED)-ல் நடிகை.

கதவைத் திறந்த 12 வயது மிக்க சின்ன பெண் என் கண்ணில் படவில்லை, ஸ்லிவ் லஸ், ட்ரான்பரண்ட் நைட்டியில் பெட்டில் படுத்து இருந்த உருவம் தான் பட்டது.

"இது....இது... " - வார்த்தை வரவில்லை. படுத்து இருந்த உருவம் ஒன்றும் பேசவில்லை, திரும்பி ஒரு கோபப் பார்வை உதிர்தது. பார்வையின் அர்த்த்ம், "யார்யா உன்னை இங்க விட்டது?"

"இது என் ரூம்..." - நான்.

"சார் இது ஹிரோயின் ரூம்... போய் மேனேஜரை பாருங்க" 12 வயது கதவை மூடியது.


"சார்... உங்களை 2-வது ப்ஃளொர் சிங்கிள் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிட்டேன். ஹிரோயினுக்கு உங்க ரூம்தான் வேனும்னு கேட்டுக்கிட்டதால வேற வழியில்லை. கொஞ்சம் பொறுத்துக்குங்க..." மேனேஜர்.

"என்னை கேக்காம...எப்படி?..."

"சார்... ஓனர் எல்லோரயும் காலி பண்ண சொன்னார், நான் தான் உங்களுக்காக பேசி சரி பண்ணினேன். திருமூர்த்தி மலையில் மூனு வாரம் ஷூட்டிங். , மொத்த யூனிட்டும் இங்கத்தான் தங்கறாங்க... வேனா... அவிங்க காலி பண்ணதும், உங்களை கீழ கொண்டு வந்திட்றேன். "

ஹிரோ, நாகேஷ், ஜெய்கணேஷ் இந்த மூவர் மட்டும் தான் எனக்கு தெரிந்த முகம். திறையில் தெரியும் உருவங்கள் நம்மை போல் மனிதர்கள் தான் என்று முதலில் உணர்ந்தது அப்போது தான்.

"சார்... உங்க லாட்ஜ்ல தான் எல்லோரும் தங்கி இருக்காங்கலாமே... பேப்பர்ல் பார்த்தேன்" - எப்பொதும் லேட்டாக வரும் STAFF.

"ஆமாம்...சார்..." நடந்த கதையை சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை.
"அது மட்டும் இல்லை, ப்யூனை கூட என்னோடு கூட்டிக்கிட்டு போனேன், அவரும் எல்லோரயும் பார்த்தார்"

"சார்... சார்... நானும், இன்னிக்கு உங்க கூட வரேன்... ஹிரோயினை காட்டுங்க சார்..."

"சார்... நான் வேனா லாட்ஜ்க்குள்ள கூட்டிக்கிட்டு போறேன், அதான் என்னால பண்ண முடியும்...."

"அது போதும் சார்... அது போதும்..." மாலை வீடுக்கு போகாமல் என்னோடு வந்தார்.... வழக்கம் போல் லாட்ஜ் வாசலில் கூட்டம். இந்த முறை செக்யூரிடி என்னையும் தடுத்து நிறுத்தினார்.

"சார் டெய்லி ஒருத்தரை கூட்டிக்கிட்டு வர்றிங்க... மேனேஜர் என்னை திட்றார்... வேன்னா... நீங்க மட்டும் போங்க, வேற யாரயும் உள்ள விடமுடியாது." - என்ன பேசியும் செக்யூரிடியை சரி செய்ய முடியவில்லை.

"அப்புறமா ஒரு நாள் பாத்துக்கலாம் சார்..." ஒரு வழியாக அவரை சமாதானம் செய்து அனுப்பினேன். மற்றோரு நாள், லாட்ஜ் மேனேஜரிடம் பேசி அவரை, உள்ளே கூட்டிக்கொண்டு போனேன், ஆனாலும், பாவம், அவரால் கடைசி வரை ஹிரோயினை பார்க்க முடியவில்லை.

பின்குறிப்பு: படம் வெளி வந்த பிறகு தான், ஹிரோயின் சங்கவி இல்லை, அஹானா என்று தெரியும், இன்று வரை படம் பார்க்க வில்லை, ஆனால், சன் டிவி, மிட் நைட் மசாலாவில், ஒரு பாட்டு மட்டும் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

Friday, June 19, 2009

முதல் வேலை


எங்கள் வகுப்பில் முதலில் வேலைக்கு சேர்ந்தது நானாகத்தான் இருக்கும். (அதன் பிறகு இந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு மூன்று வருடம் கழித்தும் வேலை தேடி அலைந்தது மிகப் பெரிய கதை.)

அப்பாவின் சிபாரிசு. அப்பாவின் நண்பரின் அண்ணன், அண்ணா யூனிவர்சிட்டி ரிட்டயர்ட் ப்ரொபசர், அவருடைய கம்பெனி. அப்போதைக்கு கம்ப்யூட்டர் துறையில், அது ஓரளவுக்கு தெரிந்த கம்பெனி தான்.

சிபாரிசு என்றாலும் இன்ட்ர்வியூ(பெயரலவில் தான் என்றாலும், அப்போது, அது எனக்கு தெரியாது).

வியாழன் மதியம், 4 மணி இருக்கும். ரூமுக்குள் அழைத்தார்கள்.

புத்தகம் எழுதிய விஷயத்தை எல்லாம் சேர்த்தும், Resume ஒரு பக்கத்தை தாண்டவில்லை. தாம்பரத்தில் ஏதோ ஒரு கடையில் Electronic Type Writter-ல் அடித்து, Xerox போட்டது.

நீட்டினேன். வாஙகி டேபிள் மீது போட்டவர்(என் வருங்கால மேனெஜர்) அதை பார்க்கக்கூட இல்லை.

உட்கார சொன்னார். Thanks சொல்லி உட்கார்ந்தேன்.

"B.E computer science-அ?"

"யெஸ் சார்"

"சரி. 10 DOS Commands சொல்லுங்க"

"CLS...DIR...DATE... TIME....ம்... ம்... " டேபிளுக்கு கீழே 4 விரல் நீட்டி இருந்தது.

"அப்புறம்?" - என்பது போல பார்த்தார்.

"ம்... CD... MD... RD..." - இப்பொது ஏழு விரல், அப்பாடா இன்னும் மூனு தான்... மூச்சை இழுத்து விட்டேன்.

"ஏதாவது அட்வான்ஸ்டு COMMANDS சொல்லக்கூடாதா?"

"ம்... DEL.." எட்டு விரல். என்ன யோசித்தும் வேறு எந்த COMMAND-ம் ஞாபகம் வரலை.

"இதுதான் அட்வான்ஸ்டு COMMAND-அ?... சரி எங்க தங்கி இருக்கீங்க?"

"பெருங்கழத்தூர்..."

"ஒரு நிமிஷம்..." என் ரெசுமெ-வை எடுத்துக்கொண்டு வெளியெ போனவர் அறை நிமிஷத்தில் உள்ளே வந்தார்.

"மன்டே மார்னிங் வேலைக்கு வந்துருங்க"

"ரொம்ப தேங்க்ஸ் சார்" கைகுலுக்கி தயங்கி நின்றேன், அதை புரிந்து கொண்டு, "அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் எல்லாம் நேராகைல சர்வர்".

மாசம் ரூ. 1500, 'சாப்ட்வர் இம்ப்ளிமெண்டர்', உடனெ ட்ரைனிங் ஆரம்பம். TMB பேங்க்-யை கம்ப்யூட்டர் மயமாக்குவது தான் வேலை. ஒரு மாதம் ட்ரைனிங் கொடுத்து, என்னை நம்பி, உடுமலைபேட்டை TMB பேங்க்-யை கையில் கொடுத்தார்கள்.

ஒரு பக்கம் குஷி, சம்பள்ம் போக, தினம் ரூ.50 தினப்படி. மற்ற செலவு எல்லாம் கம்பெனி பார்த்துக் கொள்ளும். மறுபக்கம் ஒரெ டென்ஷன். ஏதாவது சொதப்பினால்?

என்ன ஆகிவிடும்? வேலை போகுமா? பார்த்து விடலாம்ன்னு குருட்டு நம்பிக்கை ஒரு ஓரம்.

பயந்த மாதிரி ஏதும் நடக்கவில்லை. எல்லாம் நன்றாகவே போனது. போறாத குறைக்கு இராஜ மரியாதை வேறு. எனக்கு கண்ணாடி ஏஸி அறை, இன்டர்நெட்டும் அப்போது இல்லை. ஒரே பொழுதுபோக்கு SOLITAIRE GAME. விளையாடிக் களைத்து போகாமல் இருக்க, டீ, வடை தவறாமல் இரண்டு வேளை.

இரண்டு 386 SERVER MACHINE-க்கு மத்தியில், உட்கார்ந்து இருக்கும் என்னை, அதிசயமாக, கண்ணாடிக்கு வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் ஒருசில கஸ்ட்டமர்ஸ்.

எப்போதாவது "சார் சார்... DD பிரிண்ட்டர்ல மாட்டிகிச்சி..." மாதிரி கம்ப்ளையன்ட் மட்டும் தான்.

தின்மும் மதிய தூக்கம், மாலை சினிமா, வார கடைசில், கோவை(RC, வெங்கட் ரூம்), பழனி, திருமூர்த்திமலை - னு ஊர் சுற்றல், இப்படியே வாழ்க்கை சுகமாக போனது.

என் ஒரே ப்ராப்ளம், பேங்க் STAFF-க்கு ட்ரைனிங் கொடுப்பது தான்.

8 -லிருந்து 9 வரை ட்ரைனிங், 9 -லிருந்து பேங்க் வேலை, அவர்களுக்கு. 8 -லிருந்து 9 வரை ட்ரைனிங் கொடுப்பது, 9 -லிருந்து SOLITAIRE GAME, எனக்கு. பேங்க் மேனெஜர் மட்டும் இதற்கு விலக்கு, அவர், ஏற்கனவே வேறு ப்ரான்ச்-ல் ட்ரைனிங் முடித்தவர்.

"யாரவது ட்ரைனிங்க்கு சரியா வரலைன்ன சொல்லுங்க" மேனெஜர் என்னிடம் தனியாக சொல்லி வைத்திருந்தார்.

ஒரு STAFF மட்டும் எப்பொதும் ஏதாவது காரணம், சொல்லி வரவே மாட்டார். அவர் தினமும் சொல்லும் காரணமும் நம்பும்படி இருக்கும்.

"சார்... நான் தான் ஸ்கூல்ல விட்னும்ன்னு பையன் ஒரே தொல்லை..."

"மாமியாரை ரயில் ஏத்தி விட லேட்டயிடுச்சு... சார்"

"ஸ்கூட்டர் மக்கர் பன்னிடுச்சு, டவுன் பஸ் புடிச்சு வந்தேன் சார்...."

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மேனெஜரிடம் சொல்லிரலாமா? சே...பாவம்... மறுபடி ஏதும் நம்ப முடியாத படி சொன்னால் பார்த்துக்கொள்வோம் என்று விட்டு விட்டேன்.

ஒரு நாள் திரும்பவும், கிளாஸ் முடியும் போது வந்தார். பேண்ட், சட்டை எல்லாம் நனைந்து காய ஆரம்பித்து இருந்தது.

"ஸாரி சார்... வீட்டை விட்டு கிளம்பும் போது, தண்ணி வந்துடுச்சு... இன்னிக்கு விட்டா மறுபடியும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் தண்ணி வரும்...."

பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டேன். கடைசி வரை அவரை பற்றி மேனெஜரிடம் சொல்லவே இல்லை.

Monday, June 15, 2009

கரண்ட் பில் - இரண்டாம் பாகம்

(முதல் பாகம் படிக்கலைன்னா அதை படிச்சிட்டு இங்க வாங்க...)


"ஐயயோ..." னு பதறி போய் நின்னா, சுகுமார் சிரிச்சிக்கிட்டு மேல ஏறி வந்தான். "மச்சி, ஏதோ ஊத்திக்கிச்சு போல..."


"சரி வாங்க வாங்க வெளியே போயிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்..." - ரவி


"ஹும்ம்... விவரம்?" - நான்


"அதெல்லாம் ஆவாதுடி..., D வீட்டுக்கு இப்பவே நாம தான்னு தெரியும்" - சுகுமார்.


புற்றிசல் மாதிரி ஒவோருதரா வெளிய வர ஆரம்பிச்சாங்க. மொத்த அபார்ட்மென்ட்க்கும் விஷயம் தெரிஞ்சு, எல்லோரும் எங்களை சுத்தி நின்னுக்கிட்டு இருந்தாங்க. நாங்க நடுவுல.


மிடில் ஈஸ்ட்-ல கல் எறிஞ்சு சாகடிக்கிரத்தை கேள்வி பட்டிருக்கோம், அதுக்கான ச்விஸுவேஸன்ல தான் அன்னிக்கு நாங்க இருந்தோம். நிஜ கல் வரலையே தவிர, ஒவ்வொரு வார்த்தையும் கல் மாதிரி தான் இருந்திச்சு.


"காலேஜ் பசங்க-ல இதுக்குத்தான் வாடகைக்கு வைக்க கூடாதுங்கரது"

"4 மாச கை குழந்தையை வச்சிகிட்டு பவர் இல்லாம என்ன பன்றது? "

"ஒனரை கூப்பிட்டு சொல்லி, காலி பண்ண வைங்கப்பா..."

"நாளைக்கு சனி கிழமை வேற.... திங்கள் கிழமை தான் எதுவும் செய்ய முடியும்"

கௌரவமான ஒரு சில மட்டும் உதாரணத்திற்கு. நான்கு பக்கம் இருந்தும் வசவு வந்து விழுந்தது.

"வந்து... என்ன ஆச்சுன்னா... எப்படியாவது நாளைக்கு சரி பண்ணிடறோம்...." தயக்கத்தோடு ரவி இழுத்தான்.

"அட, பண்ண்றத பண்ணிட்டு... இது வேறயா? நீங்க சும்மா இருங்கப்பா..."

நாங்க எது சொன்னாலும் கேட்க யாரும் தயாரில்லை.

எங்களுக்கு சப்போர்ட் செய்வது அந்த அப்பார்ட்மென்டில் மொத்தம் நாலு வீடு தான். ரெண்டு அட்கோ ஃபிரண்ட்ஸ், அவிங்களும் வேலைக்கு போயிட்டாங்க. மீதி ரெண்டும் காலி.

கடைசியா கூட்டத்துலயே பெருசு, B அப்பார்ட்மெண்ட், சார்லி செல்லப்பா (நாங்க வச்ச பேரு - ஒரிஜினல் மறந்து போச்சு) ஆரம்பிச்சார். "ஏதோ சின்ன பசங்க பண்ணிட்டங்க.... இப்ப என்ன பண்ணலாம்ன்னு யோசிங்கப்பா..."

எங்களுக்கு அப்பத்தான் உசிரு திரும்பிச்சு. அவரை எப்படியெல்லாம் ஓட்டி இருக்கோம், அவர் தான் கடைசியா எங்களை காப்பாத்தினார். அன்றோடு அவரை ஓட்டுரதை நிறுத்திட்டோம்.

"எனக்கு ஒரு லைன்மென் தெரியும், இங்ஙனத்தான் MIG- ல இருக்கரு. நான் சொல்லிவிட்டா... சனிக்கிழமைக்கூட வந்து பாப்பாரு... ஆன அவரு கேக்கரதை குடுத்துருங்க... லீவு நாள் இல்லியா?" ஏதோ ஒரு புண்ணியவான்.

"அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை... வரச்சொல்லுங்க... ரொம்ப தேங்ஸ்ங்க...." - நாங்க ஒரே கோரஸாக.

இன்னிக்கு ராத்திரி தான் எப்படி போகுமுன்னு தெரியலை" - ஒரு சில முனுமுனுப்பு கேட்டது.

ஒரு வழியாக எல்லோரும் போன பின், எங்களுக்கே நாங்க செய்தது பெரிய தப்புன்னு புரிஞ்ச்து. அதுக்கு பரிகாரமா, பக்கத்து கடையில போய் மெழுகுவர்த்தி வாங்கி ஓவ்வொரு வீட்டுக்கும் ரெண்டு கொடுத்தோம்.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல?" அதுக்கும் திட்டு வாங்கியது தனிக்கதை.

ஒரு வழியா சனிக்கிழமை லைன்மென் வந்து தெருக்கம்பத்தில் சரி செய்ய, திங்கள்கிழமை காலேஜ் கட் அடிச்சு, FINE கட்டி, அப்புறமா ஃப்யூஸ் போட்டோம்.

ஆக, மொத்த செலவு,
லைன்மென் - ரூ. 25.
மெழுகுவர்த்தி - ரூ. 20.
FINE & Connection Fee - ரூ. 50.
கரண்ட் பில் - ரூ. 15.

Saturday, June 13, 2009

கரெண்ட் பில் - முதல் பாகம்



மறைமலர் நகர். EWS அப்பார்ட்மென்ட். நான், பன்னைபட்டி ரவி, சுகுமார் மூணு பேரும் ரூம்மெட்ஸ்.

புறா கூண்டு மாதிரி A லிருந்து P வரை 16 வீடு. Floor-க்கு 4 வீடு. நாங்க first Floor- ல G அப்பார்ட்மென்ட்.

சாப்பாடு மாமி மெஸ், பக்கத்துலயே. காலேஜ், ஊர் சுத்தல்னு ஒரே பிசி. காலையில வீட்டை விட்டா ராத்திரி தூங்க மட்டும் தான் கூண்டுக்குள்ள வருவோம்.

ரொம்ப ரொம்ப கம்மியா யூஸ் பண்றதால, கரெண்ட் பில் எப்பவும் மினிமம், ரூபாய் 15 தான்.

"நாய்க்குவேலை இல்லை நிக்க நேரம் இல்லை"ன்னு சொல்லற மாதிரி நாங்க மூணு பேரும் எப்போதும் பிசியா இருப்பதாலே, தவறாம கடைசி நாள்(due date) தவறிடும்.

காலேஜ் கட் அடிச்சு சினிமா போறதோ, சீட்டு கட்டு போடுறதோ, பொத்தேரி பசங்க ரூம்ல துங்குறதோ REALLY WORTH. ஆனா கரண்ட் பில் கட்ட காலேஜ் கட் அடிக்க முடியுமா?

ஒரு நாள் ஓடி ஆடி கூண்டுக்குள்ள வந்து சுவிட்ச் ஆன் பண்ணா லைட் எரியலை.

"சே, தே... புள்ளங்க, ப்யூஸ் புடிங்கிட்டு போய்ட்டாங்க போல ..." - சுகுமார்.

"புடுங்காம?...E.B என்ன உங்க பாட்டன் டிபார்ட்மெண்டா?" - பன்னைபட்டி.

"அப்பவே சொன்னேன்... எல்லாம் உங்களால் தான்..." - நான்.

"நீ என்ன பண்ணே? போய் கட்ட வேண்டியது தானே? சரி… சரி... இப்ப என்ன பண்றது?" - பன்னைபட்டி.

"ராத்திரி 9 மணி, இப்ப ஒன்னும் பண்ண முடியாது... எதுன்னலும் நாளைக்கு தான்" - நான்.

அப்பத்தான் AUDCO - ல வேலை செய்யற தோஸ்த் லோகு, செகண்ட் ஷிபிட், LUNCH BREAK - ல DINNAR -கு வந்திருந்தார்.

"இவ்ளோ தானா விஷயம் ... ஒரு நிமிஷம் ..." ரூமுக்குள்ள போன லோகு, உடனெ வெளியெ வந்தார். "கீழ வாங்க" சொல்லிகிட்டே விறு விறுன்னு கீழே போனார். எல்லோரும் கீழே போனோம்.

எலெக்ட்ரிக் மீட்டர் போர்டு கதவை திறந்து ஒரு தடியான சில்க் வயரை ப்யூஸ் மாதிரி செட் பண்ணினார்.

"அவளோ தான்... திரும்ப E.B.-ல கனெக்சன் குடுக்குற வரை யூஸ் பண்ணுங்க.... ஜாக்ரதை, காலைல வெளிய போகும் போது கழட்டிடுங்க...."

ரூமுக்கு வந்தோம். லைட் எரிஞ்சது.

ராத்திரி ப்யூஸ் போடுவோம், காலைல கழட்டிடுவோம். இப்படியே ஒரு வாரம் பழகி போய், கரண்ட் பில் மறந்து போச்சி.

எப்பவும் நானோ, ரவியோ தான் ப்யூஸ் போடுவோம், அன்னிக்கு வெள்ளிக்கிழமை, மறந்து போய் ரூமுக்கு போய்ட்டோம். கீழ போய் ப்யூஸ் போட சோம்பேரிதனம்.

"என்னால முடியாது .... எவனோ போங்க..." - நான்

"என்னாலையும் முடியாது.... இவன் தான் எப்பவும் போறதில்லை..." ரவி சுகுமாரை கை காட்டினான்.

"ஏய் எனக்கு எப்பிடின்னு தெரியாது... " சுகுமார்

ரவி சாப்பிடுவது போல கை செய்கை காட்டினான்... "இது மட்டும் தெரியும்மா?"

டென்சன் ஆனா சுகுமார் வயரை எடுத்துக்கிட்டு கீழெ போனான்.

"படார்..." - நு ஒரு சத்தம், என்னடான்னு பார்த்தா தெரு கம்பத்துல மின்னல். அடுத்த நொடி அப்பார்ட்மென்ட் மொத்தமா பவர் கட்.

பின்குறிப்பு: கரண்ட் பில், கரண்ட் ஒரு பக்கம் பில் ஒரு பக்கம் படம் சரிதானே? எப்ப்ப்புபுடி?

(தொடரும்)

Monday, June 8, 2009

Professor மகாலிங்கத்தின் ஞாபகசக்தி



Professor மகாலிங்கம், ரொம்ப ஞாபகசக்தி உள்ளவர். எங்களுக்கு CIRCUIT THEORY SUBJECT எடுத்தார்.

செமஸ்டர் ஆரம்பிச்சு சரியா ஒரு மாசம் மட்டும் தான் கைல ATTENDANCE எடுத்துக்கிட்டு வந்தார். அதுக்கு அப்புறம் ATTENDANCE - கு பதிலா வெறும் துண்டுசீட்டு மட்டும் தான்.

கிளாசுல எத்தனை பேர்? அவிங்க ரோல் நம்பர் என்ன? 1-ல ஆரம்பிச்சு 47-வரை எல்லாம் அத்துபடி.

யார் யார் எங்க உட்காருவாங்க, யாரு ரெகுலரா வருவாங்க, யாரு ரெகுலரா மட்டம் போடுறது்? சும்மா சொல்லகூடாது, அத்தனையும் மண்டையில ஏத்தி வச்சிருப்பாரு.

எங்க கிளாஸ் மட்டும் இல்ல, அவர் போற எல்லா கிளாசுக்கும் இதே சங்கதி தான்.

அன்பு செழியன் தான் எங்க கிளாசுல ரோல் நம்பர் 1. அவன் கிளாசுக்கு வர்றதே அபூர்வம்.

சார் ATTENDANCE ஆரம்பிக்கிறப்போ வீனா எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்ன்னு, நேரா நம்பர் 2 - ல இருந்து தான் ஆரம்பிப்பார். நம்பர் 1 துண்டுசீட்டுல ஏறிடும்.

மொத்தம் உள்ள 47 பேர்ல ஏறக்குறைய 35 பேரைத்தான் சமயத்துல கூப்பிடுவாரு. விட்டு போன நம்பர் எல்லாம் துண்டுசீட்ல இருக்கும்.

V.SANKAR (தண்டலை - சாரி சங்கர் மன்னிச்சுடு என்னை, மறுபடியும் நீ தான் கிடைச்சே) ரோல் நம்பர் 24. அவனும் அன்பு செழியன் மாதிரி தான். ஆனா அன்னிக்கு கிளாசுக்கு வந்திருந்தான்.

சார் ATTENDANCE எடுக்க ஆரம்பிச்சார். 2, 3, 4, 5, 6, 7,_,9, 10...... 22, 23,_,25, 26...

"கிளாசுக்கு வந்தும் ATTENDANCE இல்லியா?" டென்ஷன் ஆகிட்டான்.

"சார் ... சார்... என் நம்பர் கூப்பிடலை..." சங்கர்.

சும்மா கைய ஆட்டினார். "உட்காரு உட்காரு" - னு அர்த்தம்.

கடைசியா எல்லா நம்பரும் முடிஞ்சதும் சங்கர் பக்கம் திரும்பினார். "இதுக்கு தான் ரெகுலரா கிளாசுக்கு வரணும்" சொல்லிக்கிட்டே நம்பர் 24 - ஐ ஸ்டிரைக் பண்ணினார்.

நாலு நாள் தொடர்ச்சியா வரலைன்னா அவர்கிட்டபோராடித்தான் ATTENDANCE வாங்கனும்.

கடைசியா ஒரு நாள் மகாலிங்கம் சார் வந்தார், கிளாஸ் எடுத்தார், ATTENDANCE இல்லை, துண்டு சீட்டு இல்லை, PERIOD முடிஞ்சது. கிளம்ப ஆரம்பிச்சார், எல்லோருக்கும் டென்ஷன் என்னதான் நடக்குதுன்னு.

"சார் ATTENDANCE இன்னும் எடுக்கலை" எல்லாரும் ஒரே கோரசாக.

"Don't worry, Absentees are 1,8, 13,24,... " எழெட்டு NUMBER-ஐ சொல்லிடு போய்கிட்டே இருந்தார்.

Shankar. V.T

Friday, June 5, 2009

....CREASE - ஆகும் சார்



மதியம் First Period. Electrical Circuit.

எங்க Department HOD கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சார். எல்லோருக்கும் நல்ல தூக்கம்.

60% Attendance இல்லியான Exam Hall Ticket கிடைக்காது. Fine கட்டி Receipt- டைவேர்ட்ஸ்வத் கிட்ட காண்பிச்சு தலை சொறியனும். இதை avoid பண்ண தான் சிலர் கிளாஸுக்கே வந்திருந்தாங்க. சிலருக்கு Practical மார்க்ஸ் வேனும் அதான் .

போர்டுல ஏதோ Circuit போட்ட படியே HOD question கேட்டார். கிளாஸே அமைதியா இருந்துச்சு. ஒருத்தரும் வாயதிறக்கலை.

ஒருமுறை ஸ்டுடென்ட் பக்கம் திரும்பி கிளாஸை நோட்டம் விட்டார்.

"சரி இந்த question காவது பதில் சொல்லுங்க." - HOD.

எதோ question கேட்டார், மறுபடியம் அதே அமைதி. HOD க்கு டென்ஷன். ரொம்ப நேரம் அட்வைஸ் போட்டார். எதோ ஒரு பாயிண்ட்-ல அவருக்கு சட்டென டென்ஷன் எகிறுச்சு.

இந்த கேள்விக்கு பதில் சொல்லாம நான் அடுத்த சப்ஜெக்ட்-கு போக மாட்டேன். "இந்த stage-ல Voltage என்ன ஆகும்?" - பிளாக் போர்டு-ல இருந்த CIRCUIT-ஐ காண்பிச்சு கேட்டார்.

"நீ ஆரம்பி..."

"INCREASE - ஆகும் சார்" லஷ்மி நரசிமன்.

"எப்படி?"

லஷ்மி எதோ சொன்னான்.

"நோ. நெக்ஸ்ட்" உட்கார போனவனை நிறுத்தினார்.

"உன்னை உட்கார சொல்லலை... நெக்ஸ்ட்"

"DECREASE - ஆகும் சார்" P.V. பார்த்த சாரதி.

"எப்படி?"

PVP சும்மா நின்னான்.

நெக்ஸ்ட் .... நெக்ஸ்ட் .... நெக்ஸ்ட் ... அல்மோஸ்ட் பாதி கிளாஸ் நின்னுகிட்டு இருந்திச்சு.

அடுத்து Sankar V (தண்டலை). அன்னைக்கு மார்னிங் கிளாசுக்கு குட வரலை. "என்னது இது புது தலைவலியா இருக்கே? இதுக்குதான் கிளாசுக்கே வரதில்லை. என்ன சொன்னாலும் நிக்க சொல்றாரே?" தனக்குள்ள முனுமுனுத்தான். அவனுக்கும் ஒரே டென்ஷன்.

"நெக்ஸ்ட்"

"Mm ....CREASE - ஆகும் சார்"

"என்னது?"

"....CREASE - ஆகும் சார்"

"...CREASE ஆகுமா?" HOD சிரிக்க ஆரம்பிச்சார். கிளாஸ் கலகலப்பாச்சு.

எப்படியோ HOD டென்ஷன் போனது, மீதி கிளாஸ் தப்பிச்சது.

நன்றி,

Shankar. V.T.