Monday, June 8, 2009

Professor மகாலிங்கத்தின் ஞாபகசக்தி



Professor மகாலிங்கம், ரொம்ப ஞாபகசக்தி உள்ளவர். எங்களுக்கு CIRCUIT THEORY SUBJECT எடுத்தார்.

செமஸ்டர் ஆரம்பிச்சு சரியா ஒரு மாசம் மட்டும் தான் கைல ATTENDANCE எடுத்துக்கிட்டு வந்தார். அதுக்கு அப்புறம் ATTENDANCE - கு பதிலா வெறும் துண்டுசீட்டு மட்டும் தான்.

கிளாசுல எத்தனை பேர்? அவிங்க ரோல் நம்பர் என்ன? 1-ல ஆரம்பிச்சு 47-வரை எல்லாம் அத்துபடி.

யார் யார் எங்க உட்காருவாங்க, யாரு ரெகுலரா வருவாங்க, யாரு ரெகுலரா மட்டம் போடுறது்? சும்மா சொல்லகூடாது, அத்தனையும் மண்டையில ஏத்தி வச்சிருப்பாரு.

எங்க கிளாஸ் மட்டும் இல்ல, அவர் போற எல்லா கிளாசுக்கும் இதே சங்கதி தான்.

அன்பு செழியன் தான் எங்க கிளாசுல ரோல் நம்பர் 1. அவன் கிளாசுக்கு வர்றதே அபூர்வம்.

சார் ATTENDANCE ஆரம்பிக்கிறப்போ வீனா எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்ன்னு, நேரா நம்பர் 2 - ல இருந்து தான் ஆரம்பிப்பார். நம்பர் 1 துண்டுசீட்டுல ஏறிடும்.

மொத்தம் உள்ள 47 பேர்ல ஏறக்குறைய 35 பேரைத்தான் சமயத்துல கூப்பிடுவாரு. விட்டு போன நம்பர் எல்லாம் துண்டுசீட்ல இருக்கும்.

V.SANKAR (தண்டலை - சாரி சங்கர் மன்னிச்சுடு என்னை, மறுபடியும் நீ தான் கிடைச்சே) ரோல் நம்பர் 24. அவனும் அன்பு செழியன் மாதிரி தான். ஆனா அன்னிக்கு கிளாசுக்கு வந்திருந்தான்.

சார் ATTENDANCE எடுக்க ஆரம்பிச்சார். 2, 3, 4, 5, 6, 7,_,9, 10...... 22, 23,_,25, 26...

"கிளாசுக்கு வந்தும் ATTENDANCE இல்லியா?" டென்ஷன் ஆகிட்டான்.

"சார் ... சார்... என் நம்பர் கூப்பிடலை..." சங்கர்.

சும்மா கைய ஆட்டினார். "உட்காரு உட்காரு" - னு அர்த்தம்.

கடைசியா எல்லா நம்பரும் முடிஞ்சதும் சங்கர் பக்கம் திரும்பினார். "இதுக்கு தான் ரெகுலரா கிளாசுக்கு வரணும்" சொல்லிக்கிட்டே நம்பர் 24 - ஐ ஸ்டிரைக் பண்ணினார்.

நாலு நாள் தொடர்ச்சியா வரலைன்னா அவர்கிட்டபோராடித்தான் ATTENDANCE வாங்கனும்.

கடைசியா ஒரு நாள் மகாலிங்கம் சார் வந்தார், கிளாஸ் எடுத்தார், ATTENDANCE இல்லை, துண்டு சீட்டு இல்லை, PERIOD முடிஞ்சது. கிளம்ப ஆரம்பிச்சார், எல்லோருக்கும் டென்ஷன் என்னதான் நடக்குதுன்னு.

"சார் ATTENDANCE இன்னும் எடுக்கலை" எல்லாரும் ஒரே கோரசாக.

"Don't worry, Absentees are 1,8, 13,24,... " எழெட்டு NUMBER-ஐ சொல்லிடு போய்கிட்டே இருந்தார்.

Shankar. V.T

3 comments:

  1. Mams,this is kind of Okay,..

    Raja.

    ReplyDelete
  2. வாங்கண்ணே! உங்களின் எழுத்து திறமையை அப்படியே அள்ளி தெளியுங்கள்... ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பிரபாகர்.

    ReplyDelete
  3. நீங்களும் மகாலிங்கம் சார் மாதிரிதான்... இன்னும் ஞாபகமாக நினைத்திருந்து எழுதுகிறீர்களே! நிறைய எழுதுங்கள்....

    பிரபாகர்.

    ReplyDelete