Monday, June 15, 2009

கரண்ட் பில் - இரண்டாம் பாகம்

(முதல் பாகம் படிக்கலைன்னா அதை படிச்சிட்டு இங்க வாங்க...)


"ஐயயோ..." னு பதறி போய் நின்னா, சுகுமார் சிரிச்சிக்கிட்டு மேல ஏறி வந்தான். "மச்சி, ஏதோ ஊத்திக்கிச்சு போல..."


"சரி வாங்க வாங்க வெளியே போயிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்..." - ரவி


"ஹும்ம்... விவரம்?" - நான்


"அதெல்லாம் ஆவாதுடி..., D வீட்டுக்கு இப்பவே நாம தான்னு தெரியும்" - சுகுமார்.


புற்றிசல் மாதிரி ஒவோருதரா வெளிய வர ஆரம்பிச்சாங்க. மொத்த அபார்ட்மென்ட்க்கும் விஷயம் தெரிஞ்சு, எல்லோரும் எங்களை சுத்தி நின்னுக்கிட்டு இருந்தாங்க. நாங்க நடுவுல.


மிடில் ஈஸ்ட்-ல கல் எறிஞ்சு சாகடிக்கிரத்தை கேள்வி பட்டிருக்கோம், அதுக்கான ச்விஸுவேஸன்ல தான் அன்னிக்கு நாங்க இருந்தோம். நிஜ கல் வரலையே தவிர, ஒவ்வொரு வார்த்தையும் கல் மாதிரி தான் இருந்திச்சு.


"காலேஜ் பசங்க-ல இதுக்குத்தான் வாடகைக்கு வைக்க கூடாதுங்கரது"

"4 மாச கை குழந்தையை வச்சிகிட்டு பவர் இல்லாம என்ன பன்றது? "

"ஒனரை கூப்பிட்டு சொல்லி, காலி பண்ண வைங்கப்பா..."

"நாளைக்கு சனி கிழமை வேற.... திங்கள் கிழமை தான் எதுவும் செய்ய முடியும்"

கௌரவமான ஒரு சில மட்டும் உதாரணத்திற்கு. நான்கு பக்கம் இருந்தும் வசவு வந்து விழுந்தது.

"வந்து... என்ன ஆச்சுன்னா... எப்படியாவது நாளைக்கு சரி பண்ணிடறோம்...." தயக்கத்தோடு ரவி இழுத்தான்.

"அட, பண்ண்றத பண்ணிட்டு... இது வேறயா? நீங்க சும்மா இருங்கப்பா..."

நாங்க எது சொன்னாலும் கேட்க யாரும் தயாரில்லை.

எங்களுக்கு சப்போர்ட் செய்வது அந்த அப்பார்ட்மென்டில் மொத்தம் நாலு வீடு தான். ரெண்டு அட்கோ ஃபிரண்ட்ஸ், அவிங்களும் வேலைக்கு போயிட்டாங்க. மீதி ரெண்டும் காலி.

கடைசியா கூட்டத்துலயே பெருசு, B அப்பார்ட்மெண்ட், சார்லி செல்லப்பா (நாங்க வச்ச பேரு - ஒரிஜினல் மறந்து போச்சு) ஆரம்பிச்சார். "ஏதோ சின்ன பசங்க பண்ணிட்டங்க.... இப்ப என்ன பண்ணலாம்ன்னு யோசிங்கப்பா..."

எங்களுக்கு அப்பத்தான் உசிரு திரும்பிச்சு. அவரை எப்படியெல்லாம் ஓட்டி இருக்கோம், அவர் தான் கடைசியா எங்களை காப்பாத்தினார். அன்றோடு அவரை ஓட்டுரதை நிறுத்திட்டோம்.

"எனக்கு ஒரு லைன்மென் தெரியும், இங்ஙனத்தான் MIG- ல இருக்கரு. நான் சொல்லிவிட்டா... சனிக்கிழமைக்கூட வந்து பாப்பாரு... ஆன அவரு கேக்கரதை குடுத்துருங்க... லீவு நாள் இல்லியா?" ஏதோ ஒரு புண்ணியவான்.

"அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை... வரச்சொல்லுங்க... ரொம்ப தேங்ஸ்ங்க...." - நாங்க ஒரே கோரஸாக.

இன்னிக்கு ராத்திரி தான் எப்படி போகுமுன்னு தெரியலை" - ஒரு சில முனுமுனுப்பு கேட்டது.

ஒரு வழியாக எல்லோரும் போன பின், எங்களுக்கே நாங்க செய்தது பெரிய தப்புன்னு புரிஞ்ச்து. அதுக்கு பரிகாரமா, பக்கத்து கடையில போய் மெழுகுவர்த்தி வாங்கி ஓவ்வொரு வீட்டுக்கும் ரெண்டு கொடுத்தோம்.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல?" அதுக்கும் திட்டு வாங்கியது தனிக்கதை.

ஒரு வழியா சனிக்கிழமை லைன்மென் வந்து தெருக்கம்பத்தில் சரி செய்ய, திங்கள்கிழமை காலேஜ் கட் அடிச்சு, FINE கட்டி, அப்புறமா ஃப்யூஸ் போட்டோம்.

ஆக, மொத்த செலவு,
லைன்மென் - ரூ. 25.
மெழுகுவர்த்தி - ரூ. 20.
FINE & Connection Fee - ரூ. 50.
கரண்ட் பில் - ரூ. 15.

1 comment:

  1. பிரதர்,

    சுவராஸ்யமாக இருந்தது.

    15-ல் முடியவேண்டியதை திட்டுக்களோடு 110-ல் முடித்திருக்கிறீர்கள்...

    'A stitch in a time saves nine' எனும் பழமொழி நினைவிற்கு வருகிறது...

    மேலும் நிறைய எழுதுங்கள்...

    பிரபாகர்.

    ReplyDelete