Saturday, June 13, 2009

கரெண்ட் பில் - முதல் பாகம்



மறைமலர் நகர். EWS அப்பார்ட்மென்ட். நான், பன்னைபட்டி ரவி, சுகுமார் மூணு பேரும் ரூம்மெட்ஸ்.

புறா கூண்டு மாதிரி A லிருந்து P வரை 16 வீடு. Floor-க்கு 4 வீடு. நாங்க first Floor- ல G அப்பார்ட்மென்ட்.

சாப்பாடு மாமி மெஸ், பக்கத்துலயே. காலேஜ், ஊர் சுத்தல்னு ஒரே பிசி. காலையில வீட்டை விட்டா ராத்திரி தூங்க மட்டும் தான் கூண்டுக்குள்ள வருவோம்.

ரொம்ப ரொம்ப கம்மியா யூஸ் பண்றதால, கரெண்ட் பில் எப்பவும் மினிமம், ரூபாய் 15 தான்.

"நாய்க்குவேலை இல்லை நிக்க நேரம் இல்லை"ன்னு சொல்லற மாதிரி நாங்க மூணு பேரும் எப்போதும் பிசியா இருப்பதாலே, தவறாம கடைசி நாள்(due date) தவறிடும்.

காலேஜ் கட் அடிச்சு சினிமா போறதோ, சீட்டு கட்டு போடுறதோ, பொத்தேரி பசங்க ரூம்ல துங்குறதோ REALLY WORTH. ஆனா கரண்ட் பில் கட்ட காலேஜ் கட் அடிக்க முடியுமா?

ஒரு நாள் ஓடி ஆடி கூண்டுக்குள்ள வந்து சுவிட்ச் ஆன் பண்ணா லைட் எரியலை.

"சே, தே... புள்ளங்க, ப்யூஸ் புடிங்கிட்டு போய்ட்டாங்க போல ..." - சுகுமார்.

"புடுங்காம?...E.B என்ன உங்க பாட்டன் டிபார்ட்மெண்டா?" - பன்னைபட்டி.

"அப்பவே சொன்னேன்... எல்லாம் உங்களால் தான்..." - நான்.

"நீ என்ன பண்ணே? போய் கட்ட வேண்டியது தானே? சரி… சரி... இப்ப என்ன பண்றது?" - பன்னைபட்டி.

"ராத்திரி 9 மணி, இப்ப ஒன்னும் பண்ண முடியாது... எதுன்னலும் நாளைக்கு தான்" - நான்.

அப்பத்தான் AUDCO - ல வேலை செய்யற தோஸ்த் லோகு, செகண்ட் ஷிபிட், LUNCH BREAK - ல DINNAR -கு வந்திருந்தார்.

"இவ்ளோ தானா விஷயம் ... ஒரு நிமிஷம் ..." ரூமுக்குள்ள போன லோகு, உடனெ வெளியெ வந்தார். "கீழ வாங்க" சொல்லிகிட்டே விறு விறுன்னு கீழே போனார். எல்லோரும் கீழே போனோம்.

எலெக்ட்ரிக் மீட்டர் போர்டு கதவை திறந்து ஒரு தடியான சில்க் வயரை ப்யூஸ் மாதிரி செட் பண்ணினார்.

"அவளோ தான்... திரும்ப E.B.-ல கனெக்சன் குடுக்குற வரை யூஸ் பண்ணுங்க.... ஜாக்ரதை, காலைல வெளிய போகும் போது கழட்டிடுங்க...."

ரூமுக்கு வந்தோம். லைட் எரிஞ்சது.

ராத்திரி ப்யூஸ் போடுவோம், காலைல கழட்டிடுவோம். இப்படியே ஒரு வாரம் பழகி போய், கரண்ட் பில் மறந்து போச்சி.

எப்பவும் நானோ, ரவியோ தான் ப்யூஸ் போடுவோம், அன்னிக்கு வெள்ளிக்கிழமை, மறந்து போய் ரூமுக்கு போய்ட்டோம். கீழ போய் ப்யூஸ் போட சோம்பேரிதனம்.

"என்னால முடியாது .... எவனோ போங்க..." - நான்

"என்னாலையும் முடியாது.... இவன் தான் எப்பவும் போறதில்லை..." ரவி சுகுமாரை கை காட்டினான்.

"ஏய் எனக்கு எப்பிடின்னு தெரியாது... " சுகுமார்

ரவி சாப்பிடுவது போல கை செய்கை காட்டினான்... "இது மட்டும் தெரியும்மா?"

டென்சன் ஆனா சுகுமார் வயரை எடுத்துக்கிட்டு கீழெ போனான்.

"படார்..." - நு ஒரு சத்தம், என்னடான்னு பார்த்தா தெரு கம்பத்துல மின்னல். அடுத்த நொடி அப்பார்ட்மென்ட் மொத்தமா பவர் கட்.

பின்குறிப்பு: கரண்ட் பில், கரண்ட் ஒரு பக்கம் பில் ஒரு பக்கம் படம் சரிதானே? எப்ப்ப்புபுடி?

(தொடரும்)

1 comment:

  1. பிரதர்,

    ரொம்ப நல்லாருக்கு, லைட்ட சாரி பதிவ சீக்கிரம் போடுங்க....

    பிரபாகர்.

    ReplyDelete